Friday, September 13, 2013

நான் டெல்லி நீதிபதியின் பேனா பேசுகிறேன்...



நான் ஐயாவின் இதயத்திற்கு அருகில் குடியிருப்பதால் அவரை நன்கு அறிவேன் , அவர் தீர்ப்பு எழுதிவிட்டு மீண்டும் என்னை சட்டை பையில் வைக்கும் போது அவர் இதய துடிப்பு எனக்கு புரியும்.
கொஞ்சம் பொறுங்கள்.. எனக்குள் இருப்பது அரசாங்கம் வழங்கிய 'எழுது பொருள் திரவம் ' ( மை ) . அதை நீக்கிவிட்டு பேசுகிறேன். எனக்குள் அந்த அரசாங்க திரவம் இருந்தால் நானும் ஐயா மாதிரியே எழுதுவேன். ஆதலால், அதை உதறிவிட்டு, எப்பொழுதும் எழுதும் நான் இப்பொழுது மட்டும் பேசுகிறேன்.

'பிறழ் மனம்' ( புத்தி பேதலித்து இருப்பது ) கொண்டவர்கள் தவறு செய்தால் சட்டத்தால் தண்டிக்க இயலாது என்று ஐயா கூறக் கேட்டிருக்கிறேன்.