Sunday, February 16, 2014

NEW UPDATES FROM OUR GROUP OF DOMAINS







FINANCIAL ARTICLES FOLLOW US :
http://isaipriyanka.wordpress.com/2014/02/16/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

FOR MEDICAL ARTICLES FOLLOW US :
http://yazhinimaran.wordpress.com/2014/02/16/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5/

Saturday, February 15, 2014

“ஜன்னலிலும் வளர்க்கலாம் காய்கறி..!”

காக்க…காக்க..!

விஷம் நீங்கும் அதிசயம்!

”வழக்குகளை வாபஸ் வாங்காதது நீதிமன்ற மீறல்!”

Friday, February 14, 2014

THE COMPLETE NEWS BLOGS IN TAMIL

DEAR ALL ,

VISIT FOLLOWING BLOGS AND FOLLOW THEM BY MAIL TO GET ALL UPDATES  

www.tamilagamtimes.com

http://madhuvanthana.wordpress.com/

http://yazhinimaran.wordpress.com/

http://isaipriyanka.wordpress.com/

http://kitchapacha.wordpress.com/

http://kaviazhakuvinayagam.wordpress.com/

http://devadharsinivinayagam.wordpress.com/

http://shanthivinayagam.wordpress.com/

http://sarumathipappa.wordpress.com/

http://alagusundari.wordpress.com/

http://kaviazhaku.wordpress.com/

Tuesday, February 11, 2014

பன்னாட்டு நிறுவனங்களுக்கு பலியாகும் பரிதாப உயிர்கள்....

அது 1999-ம் வருடம் நவம்பர் 24-ம் தேதி... காஞ்சிபுரத்தில் உள்ள பெப்சி தொழிற்சாலை முன்பு படையோடு வந்து இறங்குகிறார் டி.ஆர்.ஓ. சகாயம். அடுத்த சில நிமிடங்களில் ஆலைக்கு சீல்! 'குளிர்பானத்தில் அழுக்குப் படலம்’ எனச் சொல்லி பெரியவர் ஒருவர் கொடுத்த புகாரில்தான் இந்த அதிரடி. அதோடு நிற்கவில்லை; மாவட்டம் முழுக்க பெப்சி விற்பனைக்கும் தடை போட்டார் சகாயம். இது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி 8.12.1999 தேதியிட்ட ஜூ.வி-யில் 'இந்த உள்ளம் அலறுதே ஐயோ!’ என்ற தலைப்பில் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
 அதன் பின்னர் சின்ன சின்னதாக பிரச்னை​கள் கிளம்பினாலும், மிகப் பெரிய இடை​வெளிக்குப் பிறகு இப்போது ஒரு சிறுமியின் உயிர் பறிக்கக் காரணமாக அமைந்துவிட்டது என்று பெப்சி மீது பகீர் சர்ச்சை கிளம்பியிருக்கிறது!
கடலூர் மாவட்டம் சேப்ளாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சா புலி. இவருக்கு அபிராமி, லலிதா, கௌசல்யா மற்றும் பரமசிவம் என நான்கு குழந்தைகள். அவர்களில் அபிராமி இப்போது உயிரோடு இல்லை. மற்ற மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம், அவர்கள் குடித்த 'பெப்சி’ குளிர்பானம்தான் என்று சொல்லப்படுகிறது.
குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு கடலூர் மருத்துவமனை வளாகத்தில் கதறித் துடித்துக்கொண்டிருந்த தந்தை அஞ்சா புலியிடம் பேசினோம். ''எனக்கு ஒரு ஆண் குழந்தை, மூன்று பெண் குழந்தைங்க. கஷ்டப்பட்டுக் கூலிவேலை செய்துதான் இவர்களையெல்லாம் காப்பாத்​திட்டு வந்தேன். வேலைக்குப் போய் வீட்டுக்குத் திரும்பி வரும்போதே, குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வந்துடுவேன். அன்னைக்கு எங்க ஊர் கடையில அரை லிட்டர் பெப்சி ரெண்டு பாட்டில் வாங்கிட்டு வந்தேன். நான்கு குழந்தைகளுக்கும் கொஞ்​சம் கொஞ்சம் குடிக்கக் கொடுத்தேன். அதை குடிச்ச கொஞ்ச நேரத்திலேயே சின்ன மகள் அபிராமி என்​கிட்ட வந்து, 'அப்பா... எனக்குத் தலையெல்லாம் சுத்துது. மயக்கமா வருதுப்பா’ன்னு சொன்னா. சொல்லிகிட்டு இருக்கும்போதே... திடீ​ருன்னு மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டா. அவ தலையைத் தூக்கிப் பார்த்தா, வாயெல்லாம் நுரை தள்ளிகிட்டு இருந்தது.
நான் பதறிப் போய் பக்கத்தில் இருந்தவங்களைக் கூப்பிடறதுக்குள்ளேயே, மத்த மூணு குழந்தைகளும் அதேபோல் மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டாங்க. இதைப் பார்த்து ஊரே திரண்டு வந்துடுச்சு. எல்லோரையும் தூக்கிட்டு வந்து பக்கத்துல இருந்த தனியார் மருத்துவமனையில் காட்டினோம். அவங்க, கடலூர் கொண்டுபோங்கன்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம் கடலூர் மருத்துவனையில சேர்த்தோம். என் பெரிய மக அபிராமி பிழைக்காம போயிட்டா.
சின்ன மக கௌசல்யாவையும் மகன் பரமசிவத்​தையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனையில் சேர்த்திருக்காங்க. லலிதா மட்டும் இங்கே இருக்கு. அவர்களோட நிலைமையும் மோசமா இருக்குன்னு சொல்றாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. எதையோ குடிக்க வாங்கிக் கொடுத்து என் கையாலேயே என் புள்ளையைக் கொன்னுட்ட பாவியாகிட்டேனே...'' என்று தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.
இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜாவிடம் பேசினோம். ''அவர்கள் காலாவதியான பெப்சி குளிர்பானத்தை அருந்தியிருக்கிறார்கள். காலாவதியானதால் குளிர்பானம் விஷத்தன்மையாக மாறியுள்ளது. அதனால்தான் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இறந்துபோன குழந்தையின் குடல் பகுதிகளில் இருக்கும் உணவையும், சம்பவத்துக்குக் காரணமான குளிர்பான பாட்டிலையும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் முழு உண்மையும் தெரிந்தவுடன், சட்டப்படி அந்த கம்பெனி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
''இது சாதாரண ஃபுட் பாய்சன் கிடையாது. அவர்கள் உட்கொண்ட உணவில் மோசமான விஷத்தன்மை இருக்கிறது. அந்தக் குழந்தையை காப்பாற்ற நாங்களும் எவ்வளவோ போராடினோம். ஆனால், அது முடியாமல் போய்விட்டது. அதனால்தான் மற்ற இரு குழந்தைகளையும் பாண்டி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்துவிட்டோம்'’ என்றனர் சிகிச்சையளித்த மருத்துவர்கள்.
பெப்சி நிறுவனத்தின் கருத்தை அறிய மாமண்டூரில் உள்ள பெப்சி தொழிற்சாலைக்குச் சென்றோம். ''மேலிட அனுமதி இன்றி நான் பேட்டி கொடுக்கக் கூடாது. எங்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து உங்களிடம் பேசுவார்கள்'' என்ற பிளான்ட் மேனேஜர் ராமு, நமது செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டார். ஆனால், கட்டுரை அச்சுக்கு செல்லும்வரை யாரும் நம்மை தொடர்புகொள்ளவில்லை.
இந்த நிலையில், 'உயிர் பறிபோக காரணமாக இருந்தது ஒரிஜினல் பெப்சியே அல்ல; அது டூப்ளிகேட்’ என்ற பிரசாரத்தையும் சிலர் செய்துவருகிறார்கள். ஒரிஜினலோ, டூப்ளிகேட்டோ... குழந்தையின் உயிர் பறிபோக காரணமாக இருந்த அத்தனை பேரும் பாரபட்சம் இல்லாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!
COURTESY -  VIKATAN

Monday, February 10, 2014

மகாபாரதம்

மகாபாரதம் மகத்தான இதிகாசம். அது ஹோமர் எழுதிய இலியட், ஒடிஸி என்கிற இரண்டு காவியங்களைவிட நீளமானது.  ஏராளமான கிளைக் கதைகள் கொண்டது. அதை இதிகாசமாக மட்டும் பார்க்காமல், மேலாண்மைப் பாடமாகவும் வாசிக்க முடியும். மாற்றி யோசிப்பதற்கான பல உத்திகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.  
'கத்தியின்றி ரத்தமின்றி ஒருவரை வெற்றி பெறமுடியும்’ என்பதை முதலில் உரைத்தது மகாபாரதம்தான். அதற்குப் பயன்பட்டது  சகுனியின் பகடை.  
தர்மரை சூதாட்டத்தின் மூலம் வெல்லலாம் என்பதைச் சகுனி அறிந்த சந்தர்ப்பம் சுவையானது.  
ஒருவனுக்கு யாகம் செய்ய நூறு வெண் பசுக்கள் தேவைப்பட்டன.  பால் வெள்ளை நிறத்தில் எந்தப் புள்ளியும் இல்லாமல் பசுக்கள் இருந்தால்தான், யாகம் நிறைவேறும். அப்படியான பசுக்களைத் தேடி அலைந்த அவன் கண்களில், இந்திரப்ரஸ்தத்தின் வாசலில் இருந்த 21 பசுக்கள் பட்டன.  ஒரே இனத்தில் பிறந்த மரபு வெண் பசுக்கள் அவை.  

பணவீக்கத்தைத் தாண்டி லாபம் தரும் முதலீடுகள்!

பணவீக்கம் பூதாகரமாக உயர்ந்து நின்று அச்சுறுத்தும் இன்றைய சூழலில் நாம் செய்யும் முதலீடுகளிலிருந்து கிடைக்கும் பலன் பணவீக்கத்தை மிஞ்சியிருப்பது அவசியமாகிறது.
இன்று பொதுமக்களுக்கான பணவீக்கத்தைக் குறிக்கும் சிபிஐ (CPI) எனப்படும் கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டெக்ஸ்  ஏறக்குறைய 10% என்ற அளவில் உள்ளது. இது பல சமயங்களில் வங்கி வைப்பு நிதியி லிருந்து (Fixed deposit) கிடைக்கும் வருவாய் பணவீக்கத்துக்கு ஈடாகாமல் போய்விடுவதால் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளை நோக்கி முதலீட்டாளர்கள் கவரப்படுகிறார்கள்.
பணவீக்கத்தைத் தாண்டிப் பலன் தரும் முதலீடுகளில் மூன்று வகையான முதலீடுகளை நாம் விளக்கமாகப் பார்ப்போம். அதில் முதலாவது, தங்கம் சார்ந்த முதலீடு. இரண்டாவது, பங்குச் சந்தை முதலீடு. மூன்றாவது, இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியிருக்கும் பணவீக்கம் சார்ந்த பாண்டு (Inflation Indexed Bonds).
பணவீக்கத்தைத் தாண்டி  பலன்தரும் நோக்கில் செய்யப்படும் இந்த மூன்று முதலீட்டு வாய்ப்புகளில் ஒருவருக்கு ஏற்றது எது? என்கிற கேள்விக்கு இனி பதில் காண்போம்.  
தங்கத்தில் முதலீடு!
தங்கம் என்பது எப்போதுமே நம்மவர்களுக்குப் பிடித்த முதலீடு. தங்கத்தின் விலை சில குறிப்பிட்ட கால அளவில் அபரிமிதமான ஏற்றம் காணும் என்றாலும், விலை வீழ்ச்சி அபரிமிதமாக இருக்க வாய்ப்பு குறைவே.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 1950-ல் ரூ.10-ஆகவும், 1970-ல் ரூ.18, 1980-ல் ரூ.133, 1990-ல் ரூ.320,  2000-ல் ரூ.440, 2005-ல் ரூ.700, 2010-ல் ரூ.1850-ஆகவும் உயர்ந்து, இன்று ஒரு  கிராமுக்கு சுமார் ரூ.3,000 என்ற அளவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இவ்வாறு நீண்டகால அடிப்படையில் தங்கம் பணவீக்கத்தை மிஞ்சிய பலன் தரும் அளவுக்கு விலையேற்றம் கண்டு பணவீக்கத்திலிருந்து முதலீடுகளைக் காத்து வந்திருக்கிறது.
தங்கத்தை நகைகளாக வாங்க விருப்பமில்லை எனில், தங்கம் சார்ந்த ஃபண்டு (Exchange Traded Fund - ETF) மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் பிற மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
பங்குச் சந்தை முதலீடு!
பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் தரும் அபரிமிதமான பலனைப் பெற நினைக்கும் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ஏற்றஇறக்கங்களைக் கண்டு அஞ்சி நிற்பதும் உண்டு. ஆனால், அச்சம்கொள்ளும் அளவுக்குப் பங்குச் சந்தைச் சார்ந்த முதலீடுகள் அபாயகரமானவையா என்றால் நிச்சயமாக இல்லை. தரமான பங்கு களையோ, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களையோ சரியாக ஆராய்ந்துத் தேர்ந்தெடுத்து நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்துவிட்டால் வேறு எந்த முதலீட்டு முறையும் பெற்று தரமுடியாத லாபத்தை இவை கொடுக்கும்.
1990-ல் 1000 புள்ளிகளாக இருந்த மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் (Sensex) 2000-ல் 5000 புள்ளிகளைக் கடந்து, 2006-ல் 10000 புள்ளிகளைத் தொட்டது. 2010-ல் 20000- ஆகி இன்று 20700 என்ற நிலையில் வளர்ந்திருக்கிறது. எனவே, 1990-ல் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டில் அங்கம் வகித்த பங்குகளில் மட்டும் பிரித்து முதலீடு செய்திருந்தால் இன்று அது ஏறக்குறைய இருபது மடங்காகப் பெருகியிருக்கும். இதே காலகட்டத்தில் 100 மடங்கு அல்லது அதற்குமேலான பெருக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்த பங்குகளும் உண்டு.
பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கான அனுபவமும் நேரமும் இல்லாத முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெறலாம்.
பணவீக்கம் சார்ந்த கடன் பத்திரங்கள்! (IIB)
பணவீக்கத்தைத் தாண்டி பலன் தரும் முதலீடுகளில் புதுவரவான பணவீக்கம் சார்ந்த கடன் பத்திரங்கள் (Inflation indexed bonds) இன்னும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. டிசம்பர் 2013-ன் பின்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் சிறு முதலீட்டாளர்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டம் 10 வருட காலத்துக்கானது. மொத்த வட்டியும் சேர்த்து 10 வருடம் முடியும்போதுதான் தரப்படும். இடையில் 10 வருட காலம் முடியும்முன்பு, முதலீடு செய்த பணத்தை வெளியே எடுக்க விரும்பினால் முதியோராக (65 வயதுக்குமேல்) இருந்தால் ஒரு வருடம் முடிவடைந்த பின்னரும், மற்றவர்கள் 3 வருடம் முடிவடைந்த பின்னரும் மட்டுமே வெளியே எடுக்க முடியும்.
அவ்வாறு எடுக்கும்போது, அவர்கள் முதலீட்டிலிருந்து வெளிவரும் கடைசிக் காலாண்டுக்கான வட்டியில் 50% பிடிக்கப்பெற்று எஞ்சிய தொகை மட்டுமே திரும்பத் தரப்படும்.
இந்தத் திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சம் ரூ5,000-மும்  அதிகபட்சம் ரூ.5 லட்சமும்  முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்களின் மத்தியில் போதிய வரவேற்பு பெறாததால், 2014, மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சாதக, பாதகங்கள்!
இந்த முதலீட்டு வாய்ப்புகளின் சாதக, பாதகங்கள் இனி...
தங்கத்தில் செய்யும் முதலீடு மிக நீண்டகால அடிப்படையில் நல்ல பலனை அளிக்கும் என்றாலும், சில சமயங்களில் போதிய லாபத்தை அளிப்பதில்லை.
அவ்வப்போது தங்கத்தின் விலை நல்ல ஏற்றத்தைத் தரும் என்றாலும், இது அடிக்கடி நிகழ்வதில்லை. ஆபரணமாக அல்லது காசு மற்றும் பார் வடிவில் வைத்தி ருக்கும் தங்கம் பாதுகாப்பில்லாதது.
ஐந்து வருடத்துக்கு மிகுதியான கால அளவில் தங்கத்தில் செய்யும் முதலீடு, பங்குச் சந்தைச் சார்ந்த முதலீடுகள் அளவுக்குப் பயன் தராது என்பது வரலாற்று உண்மை. அதுபோல, பங்குச் சந்தை ஏற்றத்தின் பாதையில் இருக்கும்போது தங்கத்தின் விலை இறங்குமுகமாகவோ, மந்தமாகவோ இருக்கும்.
பணவீக்க பாண்டை (IIB) பொறுத்தவரை, எந்தக் காலகட்டத் திலும் சிபிஐ-யைவிட 1.5% வட்டி அதிகமாகக் கிடைக்கும் என்றாலும், சிபிஐ 8 சதவிகிதத்துக்குக் கீழே குறையும் காலங்களில் வங்கி டெபாசிட்கள் ஐஐபியைவிட அதிகப் பலன் தர வாய்ப்புள்ளது. சிபிஐ 9 சதவிகிதத்துக்குமேல் இருக்கும் காலங் களில் மட்டுமே ஐஐபியின் பலன் கவர்ச்சிகரமாக இருக்குமே தவிர, மற்றச் சமயங்களின் அதன் பலன் திருப்திகரமாக இருக்காது.
பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் ஐந்து வருடத்துக்குமேலான கால அளவில், மேற்கண்ட முதலீட்டு வாய்ப்புகள் அனைத்தையும்விட அதிகமான பலனை அளிக்கும். ஐந்து வருடத்துக்கு அதிகமான கால அளவில் தங்கமும், ஐஐபியும் ஏறக்குறைய 10% பலன் தரலாம்.
ஆனால், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் இதே காலஅளவில் 12% முதல் 20% வரை (ஒரு வருட அடிப்படையில்) வளர்ச்சி காணும் தன்மை கொண்டவை.
அதேசமயம், குறுகியகால அடிப்படையில் ஏதாவது அவசரத் தேவை ஏற்பட்டால் தங்கத்தை அதிக நஷ்டம் இல்லாமல் விற்றுவிட முடியும். ஆனால், பங்குச் சந்தைச் சார்ந்த முதலீடுகளைக் குறுகியகாலத்தில் விற்கும்போது பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்திருந்தால் அதற்கேற்பதான் வருமானம் கிடைக்கும்.
தங்கத்தை எளிதாக அடகு வைத்து கடன் பெற முடியும். ஐஐபியையும் அடகு வைத்து கடன் பெறமுடியும் என்றாலும், கடன் பெறும் வசதி தங்கத்தில் உள்ள அளவுக்கு எளிதல்ல. பங்குகளையும் தங்கம் அளவுக்கு எளிதாக அடகு வைத்து கடன் பெற முடியாது. பங்குகளின் விலையில் பாதி அளவுக்கே கடன் கிடைக்கும்.
வருமான வரி அடிப்படையில்  அதிகபட்ச வரிச் சலுகையைப் பெறுவது பங்குச் சந்தைச் சார்ந்த முதலீடுகள்தான். பங்குகள் அல்லது பங்குச் சந்தைச் சார்ந்த முதலீடுகள் ஒரு வருடத்துக்குமேல் இருந்தால், கிடைக்கும் லாபத்துக்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை.
முதன்முதலாகப் பங்குகளில் செய்யும் ரூ.50,000 வரையிலான முதலீட்டுக்கு 50% 80சிசிஜி-ன்படி, வரிவிலக்கு உண்டு.
பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டமான இஎல்எஸ்எஸ் (ELSS) திட்டத்தில் ஒரு நிதியாண்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து 80சி-ன்படி வரிவிலக்குப் பெறலாம்.
தங்கத்தில் முதலீடு செய்யும்போது மூன்று வருடத்துக்குமுன்பு விற்கும் போது, ஒருவரின் அடிப்படை வருமான அளவுக்கேற்ப கிடைக்கும் லாபத்தில் (10%, 20%, 30% வரியாகச் செலுத்த வேண்டும்.
மூன்று வருடத்துக்குப் பிறகு விற்றால் பணவீக்க விகிதச் சரிக்கட்டல் (indexation) செய்தபின் லாபத்தில் 20%, இல்லையேல் 10% வரியாகச் செலுத்த வேண்டும்.
தங்கம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்து, ஓர் ஆண்டுக்குமுன் விற்றால், ஆண்டு வருவாய்க்கு உள்ள வரி வரம்பின்படி கிடைக்கும் லாபத்துக்கு வரிச் செலுத்த வேண்டும். ஓர் ஆண்டுக்குப்பின் விற்றால் பணவீக்க விகிதச் சரிக்கட்டல் (indexation) செய்தபின் லாபத்தில் 20% இல்லையேல் 10% வரியாகச் செலுத்த வேண்டும்.
ஐஐபி மூலம் கிடைக்கும் பலன் அப்படியே ஒருவரது ஆண்டு வருமானத்தில் சேர்க்கப்பட்டு அதற்கேற்றவாறு வருமான வரியாகக் கட்ட வேண்டும்.''
இனிமேல் நாம் பணவீக்கத்தைத் தாண்டி சம்பாதிப்போம்!

இம்பல்ஸ் ஷாப்பிங்கைத் தடுக்க 10 வழிகள்!

எல்லாப் பொருட்களையும் வாங்கவேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை? ஏதோ ஒரு பொருளை வாங்க சூப்பர் மார்க்கெட்டில் நுழைவோம். வாங்க நினைத்த பொருளோடு,  வாங்க நினைக்காத நான்கைந்துப் பொருட்களை வாங்குவோம். கடையைவிட்டு வெளியே வந்தபிறகு ஏன் இத்தனை பொருட்களை வாங்கினோம் என்று தெரியாமல் முழிப்போம். இதற்குப் பெயர்தான் 'இம்பல்ஸ் பையிங்’. அதாவது, நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், கண்ணுக்குப்பட்டதை எல்லாம் வாங்க நினைக்கிற மனநிலை. இந்த மனநிலையைத் தூண்டி, தங்கள் குவித்து வைத்திருக்கிற பொருட்களை விற்பதற்கான அத்தனை வேலைகளையும் பெரிய மால்களும், சூப்பர் மார்க்கெட்களும் பக்கவாகச் செய்கின்றன. இந்த வலையில் சிக்காமல், தேவையான பொருளை மட்டும் வாங்கிக்கொண்டு வெளியே வருவதற்கு இதோ பத்து வழிகள்..!